by Bella Dalima 31-10-2020 | 3:43 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 117 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனடிப்படையில், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,399 ஆக அதிகரித்துள்ளது.
6005 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10,424 ஆக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் 633 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டனர்.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் 83 பேரும் பேலியகொடை மற்றும் மீன்பிடித் துறைமுகங்களில் அடையாளம் காணப்பட்டோருடன் தொடர்புகளைப் பேணிய 236 பேரும் இதில் அடங்குகின்றனர்.