வாய்மூல கட்டளைகள், சுற்றுநிரூபங்களை கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும்: அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 25-09-2020 | 8:23 PM
Colombo (News 1st) மக்களின் பொது நலனுக்காக வழங்கப்படுகின்ற அனைத்து வாய்மூல கட்டளைகள் மற்றும் சுற்றுநிரூபங்களை கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று பணிப்புரை விடுத்தார். கிராமத்துடன் கலந்துரையாடல் செயற்றிட்டத்தின் ஆரம்பமாக நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இதனை தெரிவித்துள்ளார். பதுளை - ஹல்தும்முல்ல, வெலங்கிட கிராமத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ரஜபக்ஸ, கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நூறேக்கரில் இருந்து வெலங்விட்ட வரையிலான வீதியை புனரமைப்பது, குடிநீர் திட்டங்களை முன்னெடுப்பது, மூன்று மாதங்களுக்குள் மின்சார விநியோகம் வழங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு வழங்கினார்.