by Fazlullah Mubarak 21-09-2020 | 11:14 AM
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 685 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது ஹெரோயினுடன் 324 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 310 கிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று காலை 6 மணிமுதல் இன்று காலை 5 மணி வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.