பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

by Staff Writer 10-09-2020 | 3:36 PM
Colombo (News 1st) பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் வெட்டுக்காயங்களுடனான சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹோகந்தர - சிங்கபுர பகுதியை சேர்ந்த 74 வயதான ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 7 ஆம் திகதியில் இருந்து காணமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.