மக்கள் சக்தி செயற்றிட்டத்தின் 9 ஆவது நாள் இன்று

மக்கள் சக்தி செயற்றிட்டத்தின் 9 ஆவது நாள் இன்று

by Staff Writer 06-09-2020 | 3:44 PM
Colombo (News 1st) நிவர்த்திக்கப்படாத மக்களின் பிரச்சினைகளை கண்டறியும் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் 9 ஆவது நாளாக இன்றும் (06) முன்னெடுக்கப்படுகின்றது. மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் 05 ஆம் கட்டம் நாட்டின் 25 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் மன்னார், அநுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆராயப்படவுள்ளன. கள விஜயத்தை மேற்கொண்டுள்ள மக்கள் சக்தி குழுவினரிடம் மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தௌிவுபடுத்தி வருகின்றனர்.