வெலிசறை கடற்படை முகாம் மீளத் திறப்பு 

வெலிசறை கடற்படை முகாம் மீளத் திறப்பு 

by Staff Writer 23-06-2020 | 9:50 AM
Colombo (News 1st) வெலிசறை கடற்படை முகாம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டங்களின் கீழ் முகாம் மீண்டும் திறக்கப்படுவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர், லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். கடற்படை உறுப்பினர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் வெலிசறை கடற்படை முகாம் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி மூடப்பட்டது. சுகாதார அமைச்சின் பரிந்துரை மற்றும் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றதற்கு அமைய, முகாமை மீளத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார். இதேவேளை, தொற்றினால் பாதிக்கப்பட்ட 898 கடற்படை உறுப்பினர்களில் 786 பேர் குணமடைந்துள்ளதாகவும் கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.