by Fazlullah Mubarak 22-06-2020 | 9:12 AM
கடந்த 48 மணித்தியாலங்களில் COVID - 19 தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை 1,950 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, COVID - 19 தொற்றுக்குள்ளான 1,498 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன், 441 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.