யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரி தனிமைப்படுத்தல்

யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரி ஒருவரை தனிமைப்படுத்த நடவடிக்கை

by Staff Writer 11-06-2020 | 4:57 PM
Colombo (News 1st)  யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரி ஒருவரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணத்தில் 13 குடும்பங்களை சேர்ந்த ​61 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் கூறினார்.