by Staff Writer 04-06-2020 | 10:25 AM
Colombo (News 1st) துப்பாக்கிய பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட இரத்மலானை - சொய்சாபுர பகுதியிலுள்ள ஹோட்டலில் கப்பம் கோரியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்மலாளை, மஹிந்த மாவத்தை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் குறித்த ஹோட்டலில் ஒரு கோடி ரூபா கப்பம் கேட்டு அச்சுறுத்தித்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடந்த 29 ஆம் திகதி நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இதுவரை 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.