by Bella Dalima 30-05-2020 | 4:54 PM
Colombo (News 1st) மெக்ஸிக்கோவில் நேற்று (29) 3,227 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மேலும் 371 மரணங்களும் அங்கு பதிவாகியுள்ளன.
இதனையடுத்து, மெக்ஸிக்கோவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 84,627 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 9 ,415 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.