23 மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு

23 மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு

by Staff Writer 11-05-2020 | 7:24 PM
Colombo News 1st) நாட்டின் 23 மாவட்டங்களில் இன்று (11) இரவு 8 மணி முதல் நாளை (12) அதிகாலை 5 மணி வரை மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இந்த மாவட்டங்களில் இன்று முதல் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி தொடக்கம் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு மீள அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலிலுள்ளது. இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுலிலுள்ள போதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.