by Staff Writer 03-05-2020 | 4:19 PM
Colombo (News 1st) அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் முனிதாச கமகே உள்ளிட்ட நால்வர் மஸ்கெலியா - மவுசாகலை பொலிஸ் காவலரணில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி, அக்குரஸ்ஸயிலிருந்து சிவனொளிபாத மலைக்கு லொறியொன்றில் பயணித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட லொறியில் பயணப்பொதிகள் சில காணப்பட்டதுடன், அது பிரதேச சபைக்கு சொந்தமான லொறி எனவும் பொலிஸார் கூறினர்.
சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.