மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளோருக்கு நிவாரண சேவை

மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளானோருக்கு நிவாரண சேவை

by Staff Writer 12-04-2020 | 7:21 PM
Colombo (News 1st) சொந்த இடங்களுக்கு செல்லமுடியாமல், மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு உதவும் பொருட்டு மேல் மாகாண ஆளுநரினால் நிவாரண சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிவாரண உதவிகள் கிடைக்கப்பெறாத மற்றும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள தரப்பினர் மேல் மகாண ஆளுநரின் நிவாரண சேவை மத்திய நிலையத்தின் 011- 2092720 என் இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்க முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.