150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

by Staff Writer 15-03-2020 | 11:31 AM
Colombo (News 1st) எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் 8 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. பொதுத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள், கடந்த 12ஆம் திகதி ஆரம்பமானதுடன் எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.