by Staff Writer 02-03-2020 | 3:55 PM
Colombo (News 1st) கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இன்று (02) தொடக்கம் கணக்காய்வு நடவடிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை கணக்காய்வு சேவை சங்கம் அறிவித்துள்ளது.
இன்று பகல் முதல் கணக்காய்வு நடவடிக்கையிலிருந்து விலகுவதாக சங்கத்தின் செயலாளர் H.M.K. ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
கணக்காய்வு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், இதுவரை கணக்காய்வு சேவை ஸ்தாபிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக கணக்காய்வு அதிகாரிகளுக்கு நிரந்த நியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என H.M.K. ஹேரத் தெரிவித்துள்ளார்.
சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று முதல் கணக்காய்வு நடவடிக்கையிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை கணக்காய்வு சேவை சங்கத்தின் செயலாளர் H.M.K. ஹேரத் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.