ஆறு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் அறுவர் கைது

ஆறு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் அறுவர் கைது

by Staff Writer 25-02-2020 | 9:23 AM
Colombo (News 1st) தெஹிவளை மற்றும் மஹரகம பகுதிகளில் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிலோ 290 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுளளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. ஹெரோயினுடன் மாலைதீவு பிரஜைகள் இருவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவர் தெஹிவளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொட - பெங்கிரிவத்தை, பாணந்துறை - பிங்வத்தை மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை 6 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.