பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய சந்தேகநபர் ஒருவர் கைது

பொலிஸ் அதிகாரிகள் இருவரைத் தாக்கிய சந்தேகநபர் ஒருவர் கைது

by Staff Writer 24-02-2020 | 7:57 PM
Colombo (News 1st) கினிகத்ஹேனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் இருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரினால் பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தடியினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கினிகத்ஹேனை பிடவல பகுதியில் ஒருவர் மதுபோதையில் மோதல் விளைவிக்கும் வகையில் செயற்பட்டபோது பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது சந்தேகநபர் பொலிஸ் அதிகாரிகளை தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.