by Staff Writer 12-02-2020 | 8:53 PM
Colombo (News 1st) மாத்தறை - அக்குரஸ்ஸ, போப்பாகொட சுகீஸ்வர மகா வித்தியாலய மாணவர்களுக்கான குடிநீர் திட்டம் மக்கள் சக்தி திட்டத்தின் ஊடாக இன்று வழங்கப்பட்டது.
சுமார் 300 மாணவர்கள் கல்வி கற்கும் இந்த பாடசாலைக்கான குடிநீர் திட்டம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மக்கள் சக்தி ஊடாக ஆரம்பிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களின் எதிர்பார்ப்பை தற்போது பூர்த்தி செய்துள்ள மக்கள் சக்தி திட்டக்குழுவினர், குடிநீர் திட்டத்தை மாணவர்களிடம் இன்று கையளித்தனர்.