நான்கு மாதங்கள் பணிக்கு வராத சாரதிக்கு சம்பளம்: யாழ். மாநகர சபையில் வாக்குவாதம்

by Bella Dalima 06-02-2020 | 8:54 PM
Colombo (News 1st) நான்கு மாதங்கள் பணிக்கு வராத சாரதிக்கு சம்பளம் வழங்கியதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியதால் யாழ். மாநகர சபை அமர்வின் போது அமைதியின்மை ஏற்பட்டது. யாழ். மாநகர மேயரின் முன்னாள் சாரதிக்கு சம்பளம் வழங்கியமை தொடர்பிலேயே சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் கேள்வி எழுப்பப்பட்டது. இதனையடுத்து, சபையில் மேயருக்கும் உறுப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.