by Staff Writer 29-01-2020 | 5:23 PM
Colombo (News 1st) நிலவும் வறட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
வறட்சி காரணமாக நீருக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
நீரைப் பெற்றுக்கொள்ளும் இடங்களில் நீர் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நீரை மிக சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.