ரூமி மொஹமட் உள்ளிட்ட மூவருக்கு பிணை

by Staff Writer 06-01-2020 | 3:41 PM
Colombo (News 1st) வௌ்ளை வேன் சாரதிகள் எனக் கூறப்படும் இருவர் மற்றும் அவர்களுக்கு பணம் வழங்கியதாகக் கூறப்படும் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோர் இன்று (06) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபர்களை 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார். வழக்கு அடுத்த மாதம் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.