உர விநியோகத்தில் முறைகேடு; விசாரணை ஆரம்பம்

உர விநியோகத்தில் முறைகேடு; விசாரணை ஆரம்பம்

by Staff Writer 22-12-2019 | 7:47 AM
Colombo (News 1st) உர விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக கணக்காய்வுப் பிரிவின் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் உர விநியோகத்தின்போது பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றதாக கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. செய்கை நிலங்களின் பரப்புகளில் மாற்றங்கள் நிலவினாலும், அனைத்து போகங்களிலும் ஒரேயளவான உரத் தொகையை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.