அல்பேனிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு

அல்பேனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; 20 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 27-11-2019 | 9:17 AM
Colombo (News 1st) அல்பேனியாவில் (Albania) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, 600 பேர் காயமடைந்துள்ளனர். அல்பேனியாவில் தலைநகர் டிரானாவுக்கு வட மேற்குப் பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நேற்று நிலநடுக்கம் பதிவாகியது. இதனையடுத்து, அந்நாட்டு அரசாங்கம் இன்றைய தினத்தை துக்கதினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகளுக்காக இத்தாலி, கிறீஸ் மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளிலிருந்து மீட்புக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அல்பேனியாவில் 1979 ஆம் ஆண்டு 6.9 ரிக்டர் நில அதிர்வில் பதிவாகிய நிலநடுக்கத்தில் சிக்கி 136 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.