by Staff Writer 06-11-2019 | 9:29 AM
Colombo (News 1st) அநுராதபுரத்தில் 10 000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக் குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரே கையூட்டு பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடொன்றின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராகவுள்ள குற்றச்சாட்டுக்களை மாற்றி, முறைப்பாட்டாளருடன் சமாதானமாக செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்தே இந்தப் பொலிஸ் கன்ஸ்டபிள்கள் இலஞ்சம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.