by Staff Writer 29-10-2019 | 5:15 PM
Colombo (News 1st) நானு ஓயாவில் காணாமற்போயிருந்த 14 வயது மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நானு ஓயா பகுதியிலுள்ள பற்றைக்காட்டிலிருந்து மாணவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நானு ஓயா - டெஸ்போட் தோட்டத்தை சேர்ந்த 14 வயதான குணசேகரன் சிவராஜ் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி முதல் குறித்த மாணவர் காணாமற்போயிருந்ததாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து தோட்டத்தொழிலாளர் ஒருவரால் இன்று பகல் மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நானு ஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.