by Staff Writer 22-10-2019 | 3:31 PM
Colombo (News 1st) 39 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஒருதொகை தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் சுங்கத்தீர்வையற்ற வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 40 தங்க பிஸ்கட்களும் ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான தங்காபரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.