by Staff Writer 22-10-2019 | 9:41 PM
Colombo (News 1st) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்திருந்தது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதி வேட்பாளர்கள், கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் நிரந்தர பிரதிநிதிகள் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.