by Staff Writer 04-09-2019 | 7:01 PM
Colombo (News 1st) மாத்தறை மாவட்டத்தில் காளான் செய்கையை விஸ்தரிப்பதற்கு தென் மாகாண விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தென் மாகாணத்திலுள்ள வர்த்தக சந்தைகள் மற்றும் உணவகங்களில் காளானுக்கு அதிக கேள்வி நிலவுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள காளான் விஸ்தரிப்பு வேலைத்திட்டத்தில் 500 குடும்பங்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்காக 14 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தென் மாகாண விவசாய திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.