இன்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்

by Staff Writer 10-07-2019 | 5:34 PM
Colombo (News 1st) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது சில இடங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.