.webp)
இலங்கையின் காணிகள் கையகப்படுத்தப்பட மாட்டாது என அமெரிக்க தூதரக அதிகாரி குறிப்பிட்ட போதிலும், யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியிலுள்ள காணி மற்றும் துறைமுகத்தை அமெரிக்காவின் செனட் சபை அதிகாரிகள் இருவர் நேற்று (05) கண்காணித்துள்ளனர். இந்திய நிதியுதவியின் கீழ், பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்புலத்தில், இவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். பலாலி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க செனட் சபை அதிகாரிகள் கண்காணித்த காணி, சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. கொழும்பிலிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பிற்கு அமைய இந்த விஜயத்திற்கான அனுமதியை வழங்கியதாக, நியூஸ்ஃபெஸ்ட் இது தொடர்பில் வினவிய போது யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன் கூறினார். எனினும், தமக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய நபரை வெளிப்படுத்த அவர் மறுத்துவிட்டார். இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியிடம் வினவியபோது, தூதரகங்களின் ஆலோசனைக்கு அமைய அதிகாரிகள் செயற்பட முடியாது என அவர் கூறினார். இராஜதந்திர செயற்பாட்டிற்கு அமைய செயற்படுவதாயின், வெளிவிவகார அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றை தெளிவூட்டி அனுமதி பெற வேண்டும் எனவும் செயலாளர் தெரிவித்தார். இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவிடம் வினவிய போது, அமெரிக்க பிரதிநிதிகளின் இந்த விஜயம் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என அவர் கூறினார். இது தொடர்பில் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடமும் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களின் யாழ். விஜயம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என அவர் பதிலளித்தார். அவ்வாறு எனின், யாழ்ப்பாணத்திலுள்ள காணிகளை கண்காணிப்பதற்கு அமெரிக்க பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கியது யார்?The MCC is a gift from the American people to the people of Sri Lanka. There has been a lot of misinformation about what it is and what it is not. You can find real details here. Yes, from the embassy account. https://t.co/p1cxamJfKI
— U.S. Embassy Colombo (@USEmbSL) July 6, 2019