இலங்கையில் இராணுவ முகாமை நிறுவும் திட்டமோ எதிர்பார்ப்போ இல்லை: அமெரிக்க தூதுவர்

by Staff Writer 02-07-2019 | 7:45 PM
Colombo (News 1st) இலங்கையில் இராணுவ முகாமை நிறுவும் திட்டமோ எதிர்பார்ப்போ இல்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina teplitz தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பிரிவிற்கான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பிலேயே இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அவரின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டாலும் இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில் அது இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.