by Staff Writer 29-06-2019 | 7:40 PM
Colombo (News 1st) கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்திற்கும் இரணைமடு குளத்து நீர் வௌியேற்றத்திற்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட குழுவின் இரண்டாம் கட்ட அறிக்கை வட மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வருடம் டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல மில்லியன் ரூபா பெறுமதியான மக்களின் சொத்துக்கள் அழிவடைந்தன.
இந்த வௌ்ள அனர்த்தத்தினால் 100 மில்லியன் ரூபா நேரடி நட்டமும், 3 பில்லியன் ரூபா மறைமுக நட்டமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
வௌ்ள அனர்த்தத்திற்குள்ளாகி ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை தமக்கு எதுவித நட்ட ஈடுகளும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கூறினர்.
இந்த வௌ்ளப்பெருக்கிற்கு இரணைமடு குளமே காரணம் எனவும் புனரமைப்புப் பணிகள் உரிய தரத்தில் இடம்பெறவில்லை எனவும் அரசியல்வாதிகளும் பொதுமக்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அதனையடுத்து, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் மூவரடங்கிய விசாரணைக்குழு கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
இரணைமடு குளத்தின் வான் கதவுகள் தாமதமாகி திறக்கப்பட்டமையாலா வௌ்ள அனர்த்தம் ஏற்பட்டது என்பது தொடர்பில் ஆராயும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டது.
இந்த குழுவின் முதற்கட்ட அறிக்கையின் மூலம் சில அரச அதிகாரிகள் கவனயீனமாக செயற்பட்டமையே
இந்த அனர்த்தம் ஏற்படக் காரணம் என தெரியவந்துள்ளதாக வட மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
விசரணைக்குழுவின் முதலாவது அறிக்கை கிடைக்கப்பெற்றதையடுத்து, அந்த அறிக்கையின் பிரகாரம் இரண்டாம் கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இரண்டாம் கட்ட அறிக்கை கடந்த வாரம் கிடைக்கப்பெற்றதாக வட மாகாண ஆளுநர் காலாநிதி சுரேன் ராகவன் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.
இந்த அறிக்கை 300 பக்கங்களை கொண்டதாகவும் தமிழ் மொழியில் உள்ளதால் அதனை ஆங்கில மற்றும் சிங்கள மொழிபெயர்ப்பு செய்ததன் பின்னர் மூன்று மொழிகளிலும் வௌியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிக்கை தொடர்பில் மாற்றுக்கருத்து எழுந்துள்ளதாகவும் அதனை எழுத்து மூலமாக வழங்குமாறு தான் கோரியுள்ளதாகவும் வட மாகண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2,198 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இரணைமடு குளம் புனரமைக்கப்பட்டு கடந்த வருடம் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இரணைமடு குளத்தின் புனரமைப்பினால் குளத்தின் நீர் மட்டம் 36 அடியாக உயர்த்தப்பட்டதுடன், குளத்தின் நீர் கொள்ளளவும் விஸ்தீரனமாக்கப்பட்டது.
131 ஏக்கர் கன மீட்டர் கொள்ளளவாகக் காணப்பட்ட இரணைமடு குளத்தின் நீர் கொள்ளளவு 148 ஏக்கர் கன மீட்டர் கொள்ளளவாக விஸ்தரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.