காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

by Staff Writer 24-06-2019 | 3:31 PM
Colombo (News 1st) மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை டாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என, வளிமண்டலலலலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நீர்கொழும்பில் இருந்து புத்தளம் வரையான கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வரையும் திருகோணமலை முதல் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையிலான கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரையும் அதிகரிக்கும் என திணைக்களம் வௌியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களை அறிவுறுத்தியுள்ளது.