வவுணதீவை சுழற்றிய சுழற்காற்று - 20 வீடுகள் சேதம்

மட்டக்களப்பை சுழற்றிய சுழற்காற்று - 20 வீடுகள் சேதம்

by Fazlullah Mubarak 17-06-2019 | 9:05 AM

மட்டக்களப்பில் வவுணதீவு பகுதியை நேற்று ஊடறுத்து வீசிய சுழற் காற்றினால் சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.

வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொத்தியாவளை மற்றும் இலுப்பட்டிச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நேற்று மாலை பலத்த காற்று வீசியுள்ளது. இதில் சுமார் 20 வீடுகளின் கூரைகள் அள்ளுண்டு சென்றுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.