by Staff Writer 16-06-2019 | 12:29 PM
Colombo (News 1st) சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், ஐஸ் எனப்படும் போதைப்பொருளடங்கிய பக்கெற்றினை விழுங்கிய சந்தேகநபர் ஒருவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெல்லம்பிட்டி - நாகஹமுல்ல பகுதியில் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும், போதைப்பொருளடங்கிய பொதியொன்றை விழுங்கியதாக குறித்த சந்தேகநபர் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொலன்னாவ பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.