வைத்தியசாலை கழிவுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்

குருணாகல் போதனா வைத்தியசாலையில் குவிக்கப்பட்டிருந்த கழிவுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்

by Staff Writer 22-05-2019 | 6:45 PM
Colombo (News 1st) குருணாகல் போதனா வைத்தியசாலையில் குவிக்கப்பட்டிருந்த மருத்துவ கழிவுப்பொருட்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் நடவடிக்கையை குருணாகல் மாநகரசபை இன்று ஆரம்பித்துள்ளது. வைத்தியசாலையில் 6 நாட்களாக இந்த கழிவுப்பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தன. குருணாகல் மாநகர மேயரை வைத்தியசாலைக்குள் செல்ல அனுமதி வழங்காமையை காரணமாகக் கொண்டு கழிவகற்றும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக நேயாளர்களும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.