அரசியல்வாதிகளை கைது செய்யுமாறு கோரி பலப்பிட்டிய பிரதேசசபை உறுப்பினர் கூரைமீதேறி எதிர்ப்பு

by Staff Writer 21-05-2019 | 1:35 PM
Colombo (News 1st) பலப்பிட்டிய பிரதேசசபை உறுப்பினர் ஒருவர், பிரதேச சபையின் கூரைமீதேறி இன்று (21ஆம் திகதி) எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார். பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைத்து அரசியல்வாதிகளையும் கைது செய்யுமாறு குறித்த பிரதேசசபை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான சமிந்து குமார என்பவரே இவ்வாறு கூரை மீதேறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு ஏனைய உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியதாகவும் நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.