மலையகப் பிரதேசங்கள் அபிவிருத்தி - பிரதமர்

மலையகப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

by Staff Writer 12-05-2019 | 8:55 AM
Colombo (News 1st) நாட்டின் மலையக பிரதேசங்கள், உல்லாசப் பயணிகள் விரும்பக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பொகவந்தலா​வை, நுவரெலியா, நானு ஓயா மற்றும் கித்துல்கலை ஆகிய பிரதேசங்கள் சுற்றுலாத்துறை வலயமாக மாற்றியமைக்கப்படவுள்ளன. மேலும் மஸ்கெலியா, நல்லதண்ணி, நோட்டன்பிரிட்ஜ் ஆகிய பிரதேசங்களை உல்லாசப் பிரயாணத்துறை வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார். இதனிடையே, சிவனொளிபாதமலைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் அபிவிருத்திப் பணிகளைப் பூர்த்திசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.