காணாமற்போயிருந்த இலங்கை மீனவர்கள் கண்டுபிடிப்பு

காணாமற்போயிருந்த இலங்கை மீனவர்கள் கண்டுபிடிப்பு

by Staff Writer 11-05-2019 | 4:03 PM
Colombo (News 1st) ஃபொனி சூறாவளியின் போது காணாமற்போயிருந்த இலங்கை மீனவர்கள் சிலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 'ராஜா - 02' எனும் படகில் சென்ற 7 மீனவர்களே காணாமற்போயிருந்தனர். கிழக்கு கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஃபொனி சூறாவளி தாக்கத்தினால் கடந்த 30 ஆம் திகதி அவர்கள் காணாமற்போயிருந்தனர். காணாமற்போனவர்களை 'சம்பா - 07' என்ற படகில் சென்றவர்கள் கண்டுபிடித்து, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.