Colombo (News 1st) புதிய பிரதம நீதியரசர், பதில் சட்டமா அதிபர், புதிய கணக்காய்வாளர் நாயகம் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆகியோரை ஜனாதிபதி இன்று நியமித்துள்ளார்.
இதற்கமைய,
* பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன
* பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்ககோன்
* புதிய பிரதம நீதியரசராக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய
* பதில் சட்டமா அதிபராக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா
* புதிய கணக்காய்வாளர் நாயகமாக மேலதிக கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (29ஆம் திகதி) நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளார்.