புறக்கோட்டையில் 87 டெட்டனேட்டர்கள் கைப்பற்றல்

புறக்கோட்டை பஸ் நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் கைப்பற்றல்

by Staff Writer 22-04-2019 | 3:42 PM
Colombo (News 1st) கொழும்பு - புறக்கோட்டை பெஸ்ட்டியன் மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 87 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பெஸ்ட்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் நிலையத்தில் 12 டெட்டனேட்டர்களும் அங்கு குப்பை குவிக்கப்பட்ட இடத்தில் 75 டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.