வெல்லே சாரங்க விசேட அதிரடிப்படையினரால் கைது

பாதாள உலகக்குழு உறுப்பினர் வெல்லே சாரங்க விசேட அதிரடிப்படையினரால் கைது

by Bella Dalima 09-04-2019 | 5:41 PM
Colombo (News 1st) பாதாள உலகக்குழு உறுப்பினரான வெல்லே சாரங்க என்றழைக்கப்படும் சாரங்க பிரதீப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் 157 கிராமும் 100 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கொழும்பு -15, முகத்துவாரம் ரொக்ஹவுஸ் ஒழுங்கையில் வசிக்கும் 29 வயதான இவர், பிரபல பாதாள உலகக் குழு தலைவர்களான மாகந்துரே மதுஷ் மற்றும் கஞ்சிப்பானை இம்ரான் ஆகியோருடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். வெல்லே சாரங்கவின் வீட்டை சோதனைக்குட்படுத்திய போது வாள் ஒன்று கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வெல்லே சாரங்க, கடந்த இரண்டு வருடங்களாக தலைமறைவாகியிருந்ததாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.