by Staff Writer 06-04-2019 | 6:20 PM
Colombo (News 1st) பெண்களை வலுவூட்டி அலைச்சறுக்கு பயிற்சியாளர்களாக வேலை வாய்ப்பினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி அனுசரணையுடன் ‘உள்ளீடான வளர்ச்சிக்குரிய திறன்கள்’ திட்டமும், இலங்கையின் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சும் இணைந்து அறுகம்பே (அறுகம் குடா) பெண்கள் அலைச்சறுக்கல் கழகத்தில் தொழில்முறை வளர்ச்சி மற்றும் சான்றிதழ் பயிற்சித் திட்டமொன்றை அங்குரார்ப்பணம் செய்துள்ளன.
ஏழு மாதகால பயிற்சியின் பின்னர் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு கலிபோர்னியாவின் சன்டியாகோ சர்வதேச அலைச்சறுக்கல் சம்மேளனத்தினால் அலைச்சறுக்கல் பயிற்றுனர்கள் என்ற சான்றிதழ் வழங்கப்படும்.
அதன் பின்னர் அவர்களுக்கான வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.