நாடு கடத்தப்பட்ட மொஹம்மட் சியாம் விடுவிப்பு

துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மொஹம்மட் சியாம் விடுவிப்பு

by Staff Writer 03-04-2019 | 12:04 PM
Colombo (News 1st) துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட மொஹம்மட் சித்திக் மொஹம்மட் சியாம் விசாரணைகளின் பின்னர் இன்று (3ஆம் திகதி) அதிகாலை விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் எவ்வித குற்றச்செயல்களிலும் தொடர்புபடாத காரணத்தினால் அவர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மொஹம்மட் சித்திக்குடன் நேற்று அதிகாலை நாடு கடத்தப்பட்ட லங்கா ரஜித்த பெரேரா பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.