by Bella Dalima 30-03-2019 | 8:24 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சரான காமினி திசாநாயக்கவின் மனைவி ஶ்ரீமா திசாநாயக்கவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ எதிர்கால அரசியல் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரிய வரவுள்ளதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஸ, யார் வருவதாகக் கூறினாலும் இறுதியில் ரணில் விக்ரமசிங்கவே வருவார் என பதிலளித்தார்.