புதுவருட தினத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாது: ரவி கருணாநாயக்க

by Staff Writer 29-03-2019 | 7:23 PM
Colombo (News 1st) தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பு கொண்டாடப்படும் காலத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இதேவேளை, வெசாக் பண்டிகைக் காலத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாதிருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.