பொலிஸ் அத்தியட்சகர்கள், அதிபர்களுக்கு இடமாற்றம்

15 பிரபொலிஸ் மா அதிபர்கள், 3 பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம்

by Staff Writer 23-03-2019 | 3:51 PM
Colombo (News 1st) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 15 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு பொறுப்பான பணிபாளர், பொலிஸ் அத்தியட்சகர் G.N. டி சில்வா கொழும்பு தெற்கு பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வௌ்ளவத்தை, கருவாத்தோட்டம், பொரளை, நாரஹேன்பிட்ட மற்றும் கிருலப்பனை ஆகிய பகுதிகளுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகராக G.N. டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தவிர, பிரதி பொலிஸ் மா அதிபர் W.K.M. டி சில்வா விசேட விசாரணை பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.