by Staff Writer 15-03-2019 | 8:29 PM
Colombo (News 1st) சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான நகர சபையை நிறுவுமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் சாய்ந்தமருது கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச மக்களால் ஜூம்மா தொழுகையின் பின்னர் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.