by Bella Dalima 08-03-2019 | 5:18 PM
அதிபர் தேர்தலில் முறைகேடு: ட்ரம்பின் உதவியாளருக்கு 47 மாத சிறைத்தண்டனை
அமெரிக்க அதிபர் தேர்தலில் நடந்த முறைகேடு தொடர்பாக ட்ரம்பின் உதவியாளருக்கு 47 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் குடியரசு கட்சி சார்பில் ஹிலரி கிளிண்டனும் ஜனநாயகக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிட்டனர். தேர்தலில் ஹிலரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிரம்ப் வெற்றி பெற்றார்.
ட்ரம்பின் வெற்றியில் ரஷ்யத் தலையீடு இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அது குறித்து அதிபரின் சிறப்பு பேரவையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிபர் தேர்தலில் ட்ரம்ப் பிரசாரக்குழு அமைத்திருந்தார். அதில் 6 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பால் மனாஃபோர்ட்டும் ஒருவர். இவர் ட்ரம்பின் உதவியாளராகவும் இருந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பால் மனாஃபோர்ட்டுக்கு (Paul Manafort) 47 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இவர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக உக்ரைன் அரசியல்வாதிகளிடம் இருந்து 55 மில்லியன் டொலர் பணத்தை பெற்று வரி ஏய்ப்பு மற்றும் வங்கி மோசடி செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதை பால் மனாஃபோர்ட் மறுத்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக உக்ரைன் அரசியல்வாதிகளுக்காக பணியாற்றியதாகவும் தனக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் மறுத்தார்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி அவருக்கு 47 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.