செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 16-01-2019 | 6:27 AM
Colombo (News1st) உள்நாட்டுச் செய்திகள் 01. யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சட்டவிரோத கேபிள் இணைப்புகள் அகற்றப்பட்டன. 02. அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களை நியமிப்பதற்கான பெயர்ப்பட்டியலை வழங்குமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 03. தெஹிவளையில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாரிய தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக, பங்களாதேஷ் சிரேஷ்ட பொலிஸ் குழுவினர் நாட்டிற்கு வருகின்றனர். 04. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் குரல் பதிவின் பகுப்பாய்வு அறிக்கையை ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 05. தேசிய சரணாலயங்களுக்கு செல்வதற்கான அனுமதிச்சீட்டுகளை இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என, வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. கத்திக் குத்திற்கு இலக்கான போலந்தின் Gdansk நகர மேயர் பவல் அடமோவிச் (Pawel Adamowicz) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 02. உலகவாழ் தமிழர்களின் திருநாளாகிய தைப்பொங்கலுக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.